News June 18, 2024

அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனவே அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Similar News

News July 7, 2025

விழுப்புரம் எம்எல்ஏ – வை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்

image

2024-2025 ஆம் ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருது, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ஜூலை 7 அன்று பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News July 7, 2025

விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

image

வரும் ஜூலை 9, 2025 அன்று, நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவிச மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.

News July 7, 2025

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் திறப்பு

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மு.அமைச்சருமான செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளிடம் புதிய வீட்டினை ஒப்படைத்தார் .உடன் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.

error: Content is protected !!