News June 18, 2024
கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்றுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் தென்பெண்ணையில் திறந்துவிடப்படுவதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 328 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.85 அடியாக தற்போது உள்ளது.
Similar News
News March 12, 2026
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கிருஷ்ணகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News March 12, 2026
கிருஷ்ணகிரியில் போலீசார் அணிவகுப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, காவேரிப்பட்டினத்தில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பு, பொதுமக்கள் அச்சமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னெடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
News March 12, 2026
கிருஷ்ணகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


