News June 18, 2024
சென்னை: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

சென்னை மயிலாப்பூரில், 6 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குப்பம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன், அங்குள்ள நாய்களுக்கு பிஸ்கெட் போட்டுள்ளான். அதை சாப்பிட்ட தெரு நாய்கள், திடீரென சிறுவனை தோள்பட்டை, தலை, கால், கைகளில் கொடூரமாக கடித்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Similar News
News March 7, 2026
சென்னையில் திடீரென கட்சி தாவிய த.வெ.க-வினர்

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 122 வது வார்டு, நந்தனம் பகுதியில் உள்ள எஸ்.எம். நகர் வாரிய குடியிருப்பு பகுதி இளைஞர்கள் நேற்று (மார்ச் 06), திடீரென தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலு முன்னணியில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 7, 2026
சென்னையில் நள்ளிரவில் உயர்ந்த சிலிண்டர் விலை

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 868 ரூபாயிலிருந்து 928 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்த நிலையில் 928 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50க்கு விற்கப்படுகிறது.
News March 7, 2026
சென்னை: காரை திருடியவர் கைது

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சாம் எபினேசர் (29) தனது மாருதி காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மார்ச் 6ம் தேதி வேலை முடித்து வீடு திரும்பியபோது கார் இருந்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதாகவும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் பேரில், GPS மூலம், காரை கண்டறிந்து, திருடிய ராகுல் (23), என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.


