News June 17, 2024
₹24.50 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ₹24.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் 2024ஐ தமிழக அரசு சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது.
Similar News
News March 24, 2026
திருப்பூர் : அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

திருப்பூர் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 24, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ₹2,720 குறைந்த நிலையில் மாலை ₹2,000 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1 கிராம் தங்கம் ₹12,750-க்கும், 1 சவரன் ₹1,06,000-க்கும் விற்பனையாகிறது. போர் நிறுத்த அறிவிப்பால் நேற்று ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. பின்னர் இன்று காலை குறைந்த நிலையில், மீண்டும் உயர்ந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News March 24, 2026
கூட்டணி நலனே முக்கியம்: பிரேமலதா முடிவில் மாற்றம்

கூட்டணி நலனுக்காக தொகுதிகளின் எண்ணிக்கையை விட்டுக் கொடுக்க தயார் என பிரேமலதா தெரிவித்துள்ளார். முன்னதாக, தேமுதிக நிச்சயம் இரட்டை இலக்கத்தில் போட்டி; கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என கூறி வந்த நிலையில், அவர் திடீரென முடிவை மாற்றியுள்ளார். <<19463210>>விசிகவுக்கு 8 தொகுதிகள்<<>> ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு பிரேமலதா, ஸ்டாலினை சந்திக்க உள்ளார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.


