News June 17, 2024

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

image

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரெஸ்டோ பார்கள் தொடர்பாக கூட்டணியல் உள்ள பாஜக அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் முதல்வருடம் மனு தரவில்லை. முதல்வருக்கும், அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதா? இனியாவது முதல்வர் பள்ளி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை மூடுவாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News March 21, 2026

புதுச்சேரி: ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

image

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கிறது. தேர்தலை பாது காப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

News March 21, 2026

புதுவையில் 3 மருந்துகள் விற்பனைக்கு தடை

image

புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்து விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி தரமற்ற மருந்துகளுக்கு தடை விதித்து வருகின்றனர். இந்தநிலையில் புதுடெல்லியை சேர்ந்த மெஸ்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டிரினோல்-பி, போனிமேக்ஸ்-பிளஸ் மற்றும் கால்வாபார்க் ஆகிய 3 மாத்திரைகள் விற்பனை செய்ய புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

புதுச்சேரி: லாரியில் சிக்கிய வாலிபர்

image

கோட்டுச்சேரி, திருவாரூர் மாவட்டம் கள்ளிக்குடி சூசைநாதன் மகன் சஞ்சய் (21), இவர் கோட்டுச்சேரி மெயின்ரோட்டில் புதிதாக கட்டப்படும் வீட்டில் வேலை செய்தபோது, மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது ஏறி மணலை தள்ளிவிட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி தொட்டியில் சஞ்சயின் இடது கால் சிக்கி, காயமடைந்தது. இந்த விபத்து தொடர்பாக கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!