News June 17, 2024

45 காசுகள் கொடுத்தால் ₹10 லட்சம் கிடைக்கும்

image

ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் ரயிலில், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இதற்காக, IRCTC தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 45 காசுகள் கொடுத்தால் இன்சூரன்ஸ் பாலிசி சேர்க்கப்பட்டுவிடும். பிறகு, ரயில் விபத்து நேர்ந்து பயணிகள் இறக்க நேரிட்டால் ₹10 லட்சமும், காயமடைந்தால் காயத்தின் நிலைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். முன்னதாக, அந்த தொகையைப் பெற நாமினியை இணைத்திருக்க வேண்டும்.

Similar News

News March 18, 2026

BREAKING: அதிமுகவுடன் சேர்ந்தார்

image

OPS திமுகவில் இணைந்ததால், அதிருப்தியடைந்த அவரின் தீவிர ஆதரவாளர்கள் பலர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்து வருகின்றனர். அந்த வகையில், OPS அணியை சேர்ந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் பலர் EPS முன்னிலையில் மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும், OPS உடன் பயணித்த இன்னும் சில தலைவர்கள் அதிமுகவுக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News March 18, 2026

ஸ்டாலினிடம் நேரடியாக டீலிங் செய்யும் திருமா

image

தொகுதிப்பங்கீட்டு விவகாரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், திமுக தொகுதிப்பங்கீட்டு குழுவோ, அக்கட்சிகள் கேட்கும் தொகுதிகளை தர மறுக்கின்றன. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் திருமாவளவன், இனி திமுக குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை; ஸ்டாலினிடம் மட்டுமே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2026

ஸ்டாலினுடன் தொடர்வது ஏன்? வைகோ புதிய விளக்கம்

image

வேண்டா வெறுப்பாக திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்வதாக EPS விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியின் இறுதிக் காலத்தில் அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் உள்ளேன் என்றார். அதை நிறைவேற்றும் வகையில் மதிமுக செயல்படுவதாகவும், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்வது உறுதி என்றும் கூறினார்.

error: Content is protected !!