News June 17, 2024
உங்களை தேடி உங்கள் ஊரில்

காட்டாங்கொளத்தூரில் நாளை மறுநாள் (ஜீன்.19) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெறுகிறது. இதில் ஆட்சியர், அனைத்து துறை அலுவலர்களால், அரசு அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடை, பள்ளிகள்,பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்படும். அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை காட்டாங்கொளத்தூர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம்.
Similar News
News March 5, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயில் மோதி உடல் தூக்கி வீசப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த தாம் பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
News March 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.
News March 4, 2026
செங்கல்பட்டில் TOP சுற்றுலா தலங்கள்

⏩அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
⏩மாமல்லபுரம்
⏩முதலை வங்கி, மாமல்லபுரம்
⏩வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
⏩தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
⏩இந்திய கடல் சிப்பி அருங்காட்சியகம், மாமல்லபுரம்
⏩சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
⏩முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
⏩கோவளம் கடற்கரை, கோவளம்
*ஷேர் பண்ணுங்க மக்களே*


