News June 17, 2024

விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேகம்

image

விழுப்புரம் மாவட்டம் தென்குச்சிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் கலசம் மீது இன்று காலை 9 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பாலமுருகனை வழிபட்டனர்.

Similar News

News July 7, 2025

விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

image

வரும் ஜூலை 9, 2025 அன்று, நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவிச மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.

News July 7, 2025

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் திறப்பு

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மு.அமைச்சருமான செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளிடம் புதிய வீட்டினை ஒப்படைத்தார் .உடன் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.

News July 7, 2025

திண்டிவனம் அரசு கல்லூரியில் மயிலம் எம்எல்ஏ ஆய்வு

image

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்று இன்று (ஜூலை 7) மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினார். உடன் கல்லூரி முதல்வர் போரசியார்கள், இருந்தனர்.

error: Content is protected !!