News June 17, 2024
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆணவக்கொலை: சிபிஎம்

கட்சியின் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், காவல்துறையின் பார்வையாளராக தமிழக அரசு இருப்பதை ஏற்க முடியாது என்றார். கலப்பு திருமணம் செய்து வைத்த காரணத்தால் நெல்லை சிபிஎம் அலுவலகத்தை பெண் வீட்டார் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2026
விமான இருக்கை: தனிக் கட்டணம் வசூலிக்க கட்டுப்பாடு

விமானங்களில் ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை என குறிப்பிட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனிக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஒரே PNR எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்கவும், விமான பயணம் தொடர்பான விவரங்களை பயணிகளின் தாய் மொழியில் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
News March 18, 2026
FLASH: 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகளை கொடுத்த திமுக!

திமுக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – 28, <<19413588>>சிபிஐ – 5<<>>, மதிமுக – 4, ஐயுஎம்எல், கொமதேக, மமக-வுக்கு தலா 2 என மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்கிய கட்சிகளான சிபிஎம், விசிக, தேமுதிகவுக்கு இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இத்தேர்தலில் குறைந்தபட்சம் 170 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளது.
News March 18, 2026
அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

அதிமுகவில் தொகுதி பங்கீட்டுக்கு குழு அமைத்து 4 நாள்கள் ஆகியும் இதுவரை ஒரு கட்சியை கூட அழைத்து பேசவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளதாக அதிமுக, பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அப்படியே இருந்தாலும் ஏற்கெனவே உள்ள பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை அழைத்துப் பேசாதது ஏன் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாமதத்தால் NDA-வில் புகைச்சல் என திமுகவினர் விமர்சிக்கின்றனர்.


