News June 17, 2024

நிதியுதவி பெற கிறிஸ்துவ தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூா் மாவட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். அதில், தேவாலயங்களை பழுது பாா்த்தல், கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகையை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,விண்ணப்பிக்கும் தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிதியுதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

Similar News

News July 10, 2025

திருவாரூர்: குறுவை பயிர் காப்பீடு-கலெக்டர் கொடுத்த தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பயிர் காப்பீடு செய்திட வருகிற 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, குறுவை பயிர் சாகுபடி விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ (இ-சேவை மையங்கள்), www.pmfby.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE செய்ங்க…

News July 9, 2025

திருவாரூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

image

திருவாரூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003741>>பாகம்-2<<>>)

News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!