News June 17, 2024
அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது போலீஸ் வழக்கு

இனயம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டின்ராஜ் (55) மர்ம மரணத்தை புதுக்கடை போலீசார் தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்தனர். ஆனால் கொலை வழக்காக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இனயம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் அனுமதியின்றி ஜூன் 15ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தி 2 பேருந்தை சிறைபிடித்தனர். நேற்று இது தொடர்பாக 100 பேர் மீது புதுக்கடை
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
குமரி: லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவட்டார் அருகே தேமானூர் பகுதியில் அருமனையில் இருந்து ஆற்றூர் நோக்கி நேற்று இரவு ரப்பர் கட்டன்ஸ் ஏற்றி வந்த லாரி ஆற்றூரில் இருந்து தேமானூர் நோக்கி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்தவர் பலியானார். பைக்கில் வந்தவர் சிதறாமல் பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36) என தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
குமரியில் 39 பேருக்கு போக்சோ தண்டனை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர். ஸ்டாலின் பதவி ஏற்றத்திலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


