News June 17, 2024
ஒரே நாளில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அமோகம்

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர். நேற்று வார இறுதி நாள் என்பதால் நாமக்கல் உழவர் சந்தையில் சுமார் ரூ.10.89 லட்சத்திற்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது .விவசாயிகள் சுமார் 25 டன் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். காய்கறிகள் அதிகம் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Similar News
News October 31, 2025
நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 31, 2025
நாமக்கல்: இனி வங்கி செல்ல வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News October 31, 2025
நாமக்கல்: யோகா பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் நியமனம் செய்யபட உள்ளனர். தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் நவம்பர்-3ந் தேதி மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள விளையாட்டு அலுவலத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


