News June 17, 2024
பத்தாம் வகுப்பு மாணவா் தற்கொலை

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த கவரப்பட்டியைச் சோ்ந்த சிவமணி மகன் லோகேஷ்கண்ணன்(16). இவா் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை லோகேஷ்கண்ணன் கைப்பேசியில் நீண்ட நேரம் பெற்றோா் கண்டித்துள்ளனா்.இதனால் விரக்தியடைந்த லோகேஷ்கண்ணன் சனிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்தனர்.
Similar News
News November 8, 2025
கரூரில் தட்டிதுக்கிய முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்டம், இன்று (08.11.2025) கரூர் கிழக்கு ஒன்றியம்,
நெரூர் தென்பாகம், என்.புதுப்பாளையம் கிராமம் திமுக-வை சேர்ந்த சி.நாகமணி, எம்.கந்தசாமி,த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அஇஅதிமுக தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏரளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 8, 2025
கரூர்: ADMK-வில் ஐக்கியம்! ஷாக்கில் DMK

கரூர் மாவட்ட திமுக-வைச் சேர்ந்த முன்னாள் தாந்தோணி நகர செயலாளர் ரவி, முன்னாள் நகர துணை செயலாளர் மகாதேவன் (ம) முன்னாள் வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இது கரூர் திமுக-வினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியுள்ளது.
News November 8, 2025
கரூர்: GAS சிலிண்டர் இருக்கா?

கரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!


