News June 17, 2024

அதிகாலை நேரம் கனவு வருகிறதா? என்ன பலன்?

image

அதிகாலை நேர கனவுகள் பலிக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. அதில் இறந்தவர்களின் சடலமோ, துக்க நிகழ்ச்சியோ கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது என அர்த்தமாகும். விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அசைவம் சாப்பிடுவது போல கனவு கண்டால் அதிர்ஷ்டம் வர போகிறது என அர்த்தம்.

Similar News

News September 13, 2025

திருச்சியில் முதல் பரப்புரை ஏன்… விஜய் விளக்கம்

image

போருக்கு முன்னர் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்வதைபோல் 2026 தேர்தலுக்கான முதல் களமாக திருச்சியை தேர்வு செய்துள்ளதாக விஜய் கூறியுள்ளார். அரசியலில் பல்வேறு திருப்பங்களை திருச்சி நகரம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், அறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிட விரும்பிய இடம், MGR மாநாடு நடத்திய இடம், பெரியார் வாழ்ந்த இடம் என எப்போதும், திருச்சிக்கு அரசியல் திருப்புமுனை வரலாறு இருப்பதாக கூறினார்.

News September 13, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!

News September 13, 2025

இளைஞர்களுக்கு வருகிறது புதிய வேலைவாய்ப்புகள்

image

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற மாநாட்டில் DCM உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அரசுக்கும் வெளிநாடுகளில் உள்ள அரசு & தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக DCM தெரிவித்துள்ளார். மேலும், பொறியாளர்களை, தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வகையில் திமுக அரசு செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!