News June 16, 2024
கங்கையில் நீராட குவிந்த பக்தர்கள்

கங்கா தேவி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்ததாக புராணங்களில் கூறப்படும் நாளை இந்துக்கள் ‘கங்கா தசரா’ விழாவாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கங்கையில் புனித நீராடினால் பாவங்கள், நோய்கள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில், இன்று ‘கங்கா தசரா’ கொண்டாடப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடியதுடன், அயோத்தியிலுள்ள ராமர் கோயிலிலும் பயபக்தியுடன் வழிபட்டனர்.
Similar News
News September 13, 2025
சற்றுமுன்: முன்னாள் முதல்வர் காலமானார்

மேகாலாயா Ex CM டோன்வா டெத்வெல்சன் லாபங்(91) உடல் நலக்குறைவால் ஷில்லாங்கில் உள்ள பெத்தானி ஹாஸ்பிடலில் காலமானார். ஏழை குடும்பத்தில் பிறந்து சாலை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், 1992 – 2008 வரை 4 முறை மேகாலயாவின் முதல்வராக இருந்துள்ளார். 1972-ல் சுயேச்சையாக நோங்போ தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று MLA ஆன பிறகு பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். #RIP
News September 13, 2025
வேன்களை மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதி

குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை கிடைக்கும் நோக்கில், 12-16 இருக்கைகள் கொண்ட வேன்களை (Maxi Cab) மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த வேன்களில் நின்று செல்ல பயணிகளுக்கு அனுமதியில்லை. அதேநேரம், நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ., உயரம் இருக்கலாம். அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் பஸ்கள் 150 – 200 செ.மீ., உயரம் இருக்கலாம்.
News September 13, 2025
சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள் ? உங்களுக்காக அருமருந்து இதோ! வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடாதோடை இலை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். ஷேர் பண்ணுங்க!