News June 16, 2024
ரவுண்டானாவில் கொடி கட்டினால் நடவடிக்கை -ஆட்சியர்

நாகர்கோவில் ஆட்சியரகம் பகுதியில் உள்ள ரவுண்டானாவைச் சுற்றி, கட்சி தலைவர்கள் வரும்போது கட்சியினர் கொடி தோரணங்களை கட்டி வந்தனர். இதனால் ரவுண்டானாவின் அழகு பாதித்தது. இதை தடுக்கும் வகையில் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள் கொடிகள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 7, 2026
குமரி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

குமரி மாவட்ட மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 7, 2026
குமரி: வீட்டின் முன் மர்மமாக இறந்து கிடந்த பெண்!

சூழால் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (53). இவர் வீட்டின் முன்பு முகத்தில் காயத்துடன் அசைவற்ற நிலையில் கிடந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் சாவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 7, 2026
குமரியில் மேலும் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்!

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, 21 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் குமரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.


