News June 16, 2024
ரவுண்டானாவில் கொடி கட்டினால் நடவடிக்கை -ஆட்சியர்

நாகர்கோவில் ஆட்சியரகம் பகுதியில் உள்ள ரவுண்டானாவைச் சுற்றி, கட்சி தலைவர்கள் வரும்போது கட்சியினர் கொடி தோரணங்களை கட்டி வந்தனர். இதனால் ரவுண்டானாவின் அழகு பாதித்தது. இதை தடுக்கும் வகையில் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள் கொடிகள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
குமரி: லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவட்டார் அருகே தேமானூர் பகுதியில் அருமனையில் இருந்து ஆற்றூர் நோக்கி நேற்று இரவு ரப்பர் கட்டன்ஸ் ஏற்றி வந்த லாரி ஆற்றூரில் இருந்து தேமானூர் நோக்கி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்தவர் பலியானார். பைக்கில் வந்தவர் சிதறாமல் பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36) என தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
குமரியில் 39 பேருக்கு போக்சோ தண்டனை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர். ஸ்டாலின் பதவி ஏற்றத்திலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


