News June 16, 2024
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 2 பேர், மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
உங்கள் மூளையை மெல்லக் கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News November 13, 2025
அல்-ஃபலா பல்கலை.,க்கு தடை விதித்த AIU

ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலை.,யின் உறுப்பினர் நிலையை தற்காலிகமாக ரத்து செய்வதாக அனைந்திந்திய பல்கலை. கூட்டமைப்பு (AIU) அறிவித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பின் பின்னணியில், அல்-ஃபலாவில் பணியாற்றிய டாக்டர்கள் உமர் உன் நபி, முசாமில் ஷகீல் இருவரும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பல்கலை., மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக AIU தெரிவித்துள்ளது.
News November 13, 2025
ஒரு ரூபாய் கூட கட்சியில் பெற்றதில்லை: அண்ணாமலை

நான் சுயமாக வணிகம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நான் தொழில் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு SIR பொறுப்பாளராக உள்ள நான், அங்கு செல்வதற்கான செலவையும் நானே செய்ய வேண்டும், கட்சியிலிருந்து ₹1 கூட பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.


