News June 16, 2024

நாளை மறுநாள் வங்கிக் கணக்கில் வருகிறது ₹2000

image

மத்திய அரசு ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 பணத்தை 3 தவணைகளாக (₹2,000 வீதம்) வழங்கி வருகிறது. இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி நாளை மறுநாள் (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

உங்கள் மூளையை மெல்லக் கொல்லும் 6 பழக்கங்கள்

image

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

News November 13, 2025

அல்-ஃபலா பல்கலை.,க்கு தடை விதித்த AIU

image

ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலை.,யின் உறுப்பினர் நிலையை தற்காலிகமாக ரத்து செய்வதாக அனைந்திந்திய பல்கலை. கூட்டமைப்பு (AIU) அறிவித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பின் பின்னணியில், அல்-ஃபலாவில் பணியாற்றிய டாக்டர்கள் உமர் உன் நபி, முசாமில் ஷகீல் இருவரும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பல்கலை., மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக AIU தெரிவித்துள்ளது.

News November 13, 2025

ஒரு ரூபாய் கூட கட்சியில் பெற்றதில்லை: அண்ணாமலை

image

நான் சுயமாக வணிகம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நான் தொழில் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு SIR பொறுப்பாளராக உள்ள நான், அங்கு செல்வதற்கான செலவையும் நானே செய்ய வேண்டும், கட்சியிலிருந்து ₹1 கூட பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!