News June 16, 2024
திருச்சி: 5 பேரிடம் பணத்தை ஏமாற்றிய ஜோதிடர் கைது

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜீவானந்தம்.இவர் சில நாட்களுக்கு முன் மணிகண்டன் என்பவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து ஏமந்தார். இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் ஜோதிடர் என்பதும்,இவர் 5 பேரிடம் ரூ.13 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று மணிகண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 3, 2026
திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருச்சியை சேர்ந்த, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடம் இருந்து, ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25-ம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியில், குடும்பப் பிரச்சனை காரணமாக லாவண்யா (26) என்ற பெண்ணை அவரது கணவர் பொன்னர் (29) அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்கள் சரண்யா மற்றும் கன்னியம்மாள் ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொட்டியம் போலீசார், பொன்னாரை கைது செய்தனர்.


