News June 16, 2024

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

image

வழக்கறிஞர் கௌதமன் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், படுகொலை சம்பவத்திற்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் விருத்தாசலத்தில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், அருள் குமார், பார் அசோசியேஷன் செயலாளர் மாய.மணிகண்டன், மணிகண்ட ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 28, 2025

கடலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு உதவி மையத்தை (04142-222338) தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News August 28, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.28) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நல்லாத்தூர், புதுக்கடை, தூக்கணாம்பாக்கம், நத்தப்பட்டு, திருப்பாப்புலியூர், எஸ்.புதூர், சிற்றரசூர், ஆராய்ச்சி குப்பம், கீழ்கவரப்பட்டு, அடரி, எம்.பரூர், எருமனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.27) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!