News June 16, 2024
புலி சின்னத்தை கட்சிக்கு மீண்டும் கேட்க சீமான் முடிவு

மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாததால், மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அந்த சின்னத்திலேயே போட்டியிட அக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாக புலி சின்னத்தை மீண்டும் கேட்க சீமான் முடிவு செய்துள்ளார். புலி சின்னம் தரவில்லையெனில் விவசாயி சின்னத்தை கேட்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
BREAKING: டெல்லி செல்லும் விஜய்.. கூட்டணியில் திருப்பம்?

கரூர் வழக்கில் CBI-ன் விசாரணைக்காக விஜய், இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். ஏற்கெனவே 2 முறை நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளித்த நிலையில், 3-வது முறையாக ஆஜராக உள்ளார். முன்னதாக, நேற்று தவெக மா.செ.,-க்கள் கூட்டத்திற்கு பிறகு NDA-வில் இணைய விஜய் OK சொன்னதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த டெல்லி விசிட்டில் அவர், பாஜக தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 14, 2026
விஜய் முடிவால் கெத்து காட்டுவாரா சீமான்?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தும் தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. இதனால் தவெக தனித்தே போட்டி என பேசப்பட்டது. இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் தவெக இணைய விஜய் இசைவு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது சாத்தியமானால், 2026 தேர்தலிலும் தனித்து நிற்கும் ஒரே கட்சி என்ற அடையாளத்தை நாதக மீண்டும் பெறும் என்று சீமான் விரும்பிகள் கூறுகின்றனராம்.
News March 14, 2026
திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை முடித்துவைப்பு

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முடிவடையவுள்ளது. இப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஜன.20 முதல் 4 நாள்கள் நடைபெற்றது. பின்னர் பிப்.17-ல் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாதம் 20-ம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில், 2021 முதல் பொறுப்பு வகிக்கும் திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இது முறைப்படி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.


