News June 16, 2024
சிதம்பரம் சப் கலெக்டர் வாய்க்கால்களை தீர்வாரும் பணி ஆய்வு

சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிகால் கூட்டம் மூலமாக காவல் டெல்டா சிறப்பு திருவாரூர் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் ரேஷ்மி ராணி ஆய்வு செய்தார். இதில் சிவராம சுந்தரி ஓடை, பாசிமுத்தா ஓடை கவரப்பட்டு வாய்க்கால் அனைத்து பணிகளையும் சிறப்பாக நடைபெறுகிறதா என்று அதிகாரியிடம் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 15, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையார் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
News August 15, 2025
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க முருகன் கோயில்கள்

கடலூர் மக்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள்:
▶புது வண்டிபாளையம் சுப்பிரமணியர் கோயில்
▶திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில்
▶ பரங்கிப்பேட்டை முத்துக்குமரசுவாமி கோயில்,
▶மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
▶ வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்.
News August 15, 2025
கடலூர் மக்களே புகாரளிக்க இதை குறித்து கொள்ளுங்கள்!

கடலூர் மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 04142-234035 என்ற எண்ணில் புகாரளியுங்கள். மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!