News June 16, 2024
வேலை வாங்கி தருவதாக ரூ.6.10 லட்சம் மோசடி

கோவை செட்டிபாளையத்தை சோ்ந்த பெரியசாமி, வரதராஜபுரத்தை சேர்ந்த லோகநாதன், உப்பிலிபாளையத்தை சேர்ந்த சக்தி சரவணா உள்ளிட்ட மூவரிடம் வெள்ளலூரை சேர்ந்த சாந்தி என்பவர் சில மாதங்களுக்கு முன் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.10 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை, பணமும் கொடுக்கவில்லை. இதனையடுத்து மூவரும் போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாந்தி நேற்று கைது செய்யப்பட்டார்
Similar News
News March 5, 2026
பொள்ளாச்சி: தட்டி தூக்கிய அதிமுக!

பொள்ளாச்சி தேவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் அக்கட்சிகளிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் வ.ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இம்மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
News March 5, 2026
மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் குடும்ப பிரச்சினை, இடம் மற்றும் பண பிரச்சினை தொடர்பான 45 மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு சுமூக தீர்வும், இரு மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News March 5, 2026
எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது; 2 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர் பதியப்பட்டது. ஒரு மனு மேல் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


