News June 16, 2024

மீண்டும் நாய்க்கடி சம்பவம்

image

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர் நிகழ்வாகி வருகின்றன. அந்தவகையில், சென்னை அடுத்த செங்கல்பட்டில் தெருவில் விளையாடிய 2 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்களை வீசி, நாய்களை விரட்டினர். இதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News March 11, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

image

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கேஸ் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகம், பெட்ரோல் இருப்பு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்பின், தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

News March 11, 2026

BREAKING: மார்ச் 28-ல் தொடங்கும் IPL திருவிழா!

image

ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் IPL 2026 தொடருக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 28-ம் தேதி இத்தொடரின் முதல் போட்டியில் RCB, SRH அணிகள் பெங்களூருவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 30-ம் தேதியன்று, கவுகாத்தியில் CSK தனது முதல் போட்டியை RR அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. CSK அட்டவணை: மார்ச் 30- RR, ஏப். 3- PBKS, ஏப். 5- RCB, ஏப். 11- DC.

News March 11, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

திருச்சி திமுக மாநில மாநாட்டில் <<19350365>>நகைக் கடன்<<>> தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை சேர்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி தலைமையிலான குழு, தேர்தல் அறிக்கையை விரைவில் ஸ்டாலினிடம் வழங்க உள்ளது. இதன்பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

error: Content is protected !!