News June 16, 2024

தருமபுரி: குடிநீரை காய்ச்சி குடிங்க மக்களே

image

கர்நாடகா மாநிலம் மற்றும் பெங்களூரில் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் வரும் மழைநீர் மண் கலந்து கலங்களாக ஒகேனக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை நன்கு காய்ச்சி ஆறவைத்து குடிக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540114>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க

News August 28, 2025

தர்மபுரி: கணவாயில் இத்தனை விபத்துக்கள் ?

image

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு நெடுசாலையில் உள்ள தொப்பூர் கணவாய் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 961 விபத்துக்கள் ஏற்பட்டு, 225 பேர் பலியானதாக தரவுகள் கூறுகின்றன. பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள் வரும் போது சாலையின் உயரம் குறைவாக இருப்பதால், வேகத்தில் பிரேக் பெயிலியர் ஆவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இதை கொலைகார கணவாய் என்கின்றனர்.

error: Content is protected !!