News June 15, 2024
கேஸ் ஏஜென்சிக்கு ஆதார் கார்டுடன் செல்லுங்கள்

கள்ளச் சந்தையில் சிலிண்டர் புழக்கத்தை தவிர்ப்பதற்காக e-KYC அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுவரை அப்டேட் செய்யாதவர்கள், சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு நேரில் சென்று e-KYC பதிவு செய்துகொள்ளலாம். ஆதார் அட்டை மற்றும் சிலிண்டர் புக்கிங் ரசீதை பயனாளர்கள் எடுத்துச் சென்றால் உடனடியாக கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, e-KYC அப்டேட் செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.
Similar News
News September 12, 2025
OFFICIAL: நேபாள் இடைக்கால அரசு தலைவராகும் சுசீலா

நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இன்று இரவு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீலாவின் பதவியேற்பிற்காக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. GEN Z போராட்ட குழு – ராணுவம் இடையே இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், சுசீலாவை இடைக்கால PM-ஆக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
News September 12, 2025
BREAKING: தீபாவளி பரிசாக ₹2,000?.. அரசு புதிய தகவல்

தீபாவளி பரிசாக PM KISAN திட்ட 21-வது தவணை தொகையை விரைவில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 4 மாத இடைவெளியில் தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தவணை ஆக.2-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இந்நிலையில், வடமாநில வெள்ள பாதிப்பு கருதி தீபாவளி பண்டிகைக்கு முன் (அக்டோபர்) அடுத்த தவணை வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 12, 2025
Parenting: உங்கள் குழந்தையை இதிலிருந்து காப்பாத்துங்க

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதிலிருந்து உங்கள் குழந்தையை காக்க, அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். ➤அந்தரங்க உறுப்புகள் பற்றி கற்பியுங்கள் ➤தங்கள் அனுமதி இல்லாமல் யாரும் அவர்களை தொடக்கூடாது என சொல்லுங்கள் ➤எது நடந்தாலும் பெற்றோரிடம் சொல்லவேண்டும் என கூறுங்கள் ➤Good Touch, Bad Touch-ஐ விளக்க விழிப்புணர்வு வீடியோக்களை போட்டு காட்டுங்கள். SHARE.