News June 15, 2024

தனிநபர்கள் சிம் கார்டு பெற கட்டுப்பாடு

image

இந்தியாவில் தனிநபர்கள் சிம் கார்டு பெற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒருவர் 9 சிம் கார்டுகளை பெறலாம். மோசடி செயலுக்கு சிம் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபோன் தொலைந்து போகும் பட்சத்தில், அவர்களது பெயரில் உள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையை தடுக்கும் வாய்ப்பையும் Dot வழங்கியுள்ளது.

Similar News

News March 3, 2026

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

image

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக EPS தெரிவித்துள்ளார். மேலும் அவர், சசிகலாவின் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருவது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தற்போதைய அரசியல் சூழல், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

News March 3, 2026

‘கூட்டணியிலிருந்து விலகுங்கள்’.. மதிமுகவில் குமுறல்

image

2021-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றிபெற்றது. இம்முறை ECI-ன் அங்கீகாரத்தை மீண்டும் பெற 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால், உதயசூரியன் என்றால் 4, தனி சின்னம் என்றால் 3 தொகுதிகள் என திமுக சொல்லிவிட்டதாம். இதை ஏற்க முடியாத <<19223088>>மதிமுக <<>>தொண்டர்கள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என வைகோவிடம் கூறியுள்ளார்களாம்.

News March 3, 2026

மார்ச் 6-ல் அதிமுக தொகுதிப்பங்கீடு அறிவிப்பா?

image

யாருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவது, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து நாளை அதிமுக மா.செ.க்களின் கருத்துகளை EPS கேட்கவிருக்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு MP பதவி வழங்குவது என 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும், மார்ச் 6-ம் தேதி தொகுதிப்பங்கீட்டு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!