News June 15, 2024
கோவில் தகராறு 16 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே உள்ள மேல கூட்டுடன் காட்டில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரவு செலவு கணக்கு சம்பந்தமாக இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் இரு கோஷ்டிகள் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
பாமக பழைய மாவட்ட செயலாளரே தொடர்வார் என அறிவிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக பரமகுரு என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவரை மாற்றி நெப்போலியன் என்பவரை அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது சிறிது நேரத்திற்கு முன்பு பழைய மாவட்ட செயலாளரை அந்த பொறுப்பில் தொடர்வார் என அன்புமணி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News September 8, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து காவல் விவரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.
News September 7, 2025
தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி NO கவலை..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.