News June 15, 2024

அனுமதியின்றி பயணம் செய்தால் உடனடியாக அபராதம்

image

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிக கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

மேலூர்: இளைஞர் கொலை வழக்கில் நண்பர்கள் மூவர் கைது

image

மேலூர் செக்கடிபஜார் பகுதியில் கடந்த 9ஆம் தேதி மணிமாறன் என்ற இளைஞர் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக மேலூர் டிஎஸ்பி சிவகுமார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மணிமாறனின் நண்பர்களான ராஜேஷ், ரமேஷ், மற்றும் முகமதுயாசின் ஆகியோரை கைது செய்தனர்.

News November 13, 2025

ஜனவரிக்கு பிறகே கூட்டணி முடிவு: கட்சிகள் திட்டம் என்ன?

image

பாமக, தேமுதிக, அமமுக, தவாக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளன. அதன் பின்னணியில், மக்களின் ‘Pulse’ அறிய நடந்து வரும் சர்வேக்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க இந்த கட்சிகள் தயாராகி வருகின்றன.

News November 13, 2025

Business 360°: ₹4,300 கோடி ஊழல்: TRIL நிறுவனத்துக்கு தடை

image

*நைஜீரியாவில் ₹4,300 கோடி ஊழல் குற்றச்சாட்டு சிக்கியுள்ள இந்தியாவின் TRIL நிறுவனத்திற்கு உலக வங்கி தடை. *தேசிய பங்குச்சந்தை NIFTY-யின் நிகர லாபம் 61% அதிகரித்து ₹557 கோடியாக உயர்வு. *நாட்டின் சில்லறை பணவீக்கம் 0.25% குறைந்தது. *ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்க JanSamarth இணையதளம் தொடக்கம். *ஜப்பானில் இந்திய ஜவுளி கண்காட்சி தொடங்குவதால், திருப்பூருக்கு ஆர்டர் வர வாய்ப்பு.

error: Content is protected !!