News June 15, 2024
அனுமதியின்றி பயணம் செய்தால் உடனடியாக அபராதம்

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிக கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
மதுரை: மல்லிகை பூ விலை இனி அதிகரிக்கும்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ நேற்று (கிலோ) ரூ.1200 வரை விற்பனையானது மற்ற பூக்களின் நிலையம் கணிசமாக உயர்ந்தது. பிச்சிப்பூ ரூ.1000, முல்லை ரூ.900, கனகாம்பரம் ரூ.800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150 சென்ட் மல்லி ரூ.60 வியாபாரி கூறும் போது; தற்போது வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால் பூக்களின் குறைந்துள்ளது. முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் மேலும் அதிகரிக்கும் என்றார்.
News March 5, 2026
கடைசி நேரத்தில் மாறியது.. தமிழக அரசியலில் பரபரப்பு

பாமகவை தனது கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை தேர்தலில் அன்புமணியும், ராஜ்யசபா தேர்தலில் சௌமியாவும் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. இன்று காலை வரை இதுதான் நிலைமை. ஆனால், கடைசி நேரத்தில் பெரிய ட்விஸ்ட்டாக அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், மாற்று வேட்பாளராக செளமியா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
News March 5, 2026
கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் எப்படி வந்தது?

திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு போன்றோர் ராஜ்யசபா சீட் கேட்டு டெல்லியில் முகாமிட்டனர். ஆனால், காங்., தலைமையோ, சீனியர்களை விட, தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய தலைவரை அடையாளப்படுத்த விரும்பியது. இதனால், ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் டெல்லியில் தமிழகத்தின் குரலாக இவர் ஒலிப்பார் என்றும் கூறப்படுகிறது.


