News June 15, 2024
பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்கெட்டில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் என்றாலே பூக்களின் விலை உயர்வது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூவின் விலை 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதேபோல முல்லை, செவ்வந்தி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 13, 2025
BIHAR RESULT: வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

பிஹார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (நவ.14) நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தலைநகர் பாட்னாவில் நவ.16 வரை தேர்தல் நடத்தை விதிகளை நீட்டித்து ECI உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
இன்று ஒரே நாளில் ₹9,000 விலை உயர்ந்தது

வெள்ளி விலை இன்று(நவ.13) ஒரே நாளில் கிராமுக்கு ₹9 அதிகரித்துள்ளது. கிராம் ₹182-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,82,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் சரிந்த வெள்ளியின் விலை, மீண்டும் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் அந்தப் பக்கம் திரும்பியுள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாள்களிலும் வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளதாம்.
News November 13, 2025
இந்த ஆப்பிள் விலை ₹10 கோடி.. ஆனா சாப்பிட முடியாது!

இது மரத்தில் காய்த்த ஆப்பிள் கிடையாது. மும்பையை சேர்ந்த ரோஹித் பிசால் என்பவரின் கைவண்ணத்தில் உருவானது. தங்கமும் வைரமும் கொண்டு இழைக்கப்பட்டுள்ள இது, தாய்லாந்தின் Royal Palace-ல் வைக்கப்பட்டுள்ளது. 1,936 சிறிய ரக வைர கற்களும், 9 கேரட் & 18 கேரட் தங்கத்தினாலும் இந்த ஆப்பிள் செய்யப்பட்டுள்ளது. வெறும் 29.8 கிராம் தான் என்றாலும், இதை வாங்கும் விலைக்கு கிட்டத்தட்ட 4 BMW கார்களை வாங்கி விடலாம்.


