News June 15, 2024
ரவுடி பட்டியல் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி உத்தரவிட கோரி, தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ரவுடி பட்டியல் தயாரிப்பில் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஜிபிக்கு எதிராக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News March 6, 2026
130+ மணிநேரத்துக்கு மேலாக ஆப்லைனில் ஈரான்!

போர் தொடர்வதால் ஈரானில் 130+ மணி நேரத்திற்கும் மேலாக இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானின் நெட்வொர்க் வேகம் 1% முதல் 5% வரை மட்டுமே உள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான ‘நெட்பிளாக்ஸ்’ தெரிவித்துள்ளது. உள்நாட்டு தகவல்கள் கசிவதைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு போராட்டத்தின் போதும் இதேபோன்று இணைய சேவை கட்டுப்படுத்தப்பட்டது.
News March 6, 2026
பெட்ரோல் விலை உயருமா.. தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வு விலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாகவும், உள்நாட்டு சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.. ஓபிஎஸ் ஷாக்

திமுகவில் இணைந்த OPS, தனது ஆதரவாளர்களை அக்கட்சியில் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், அவரது அணியில் இருந்த பலரும் அதிமுகவிற்கு திரும்பி ஷாக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் T ராமசாமியின் மகன் TR சீனிவாசன் EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.


