News June 15, 2024
ரவுடி பட்டியல் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி உத்தரவிட கோரி, தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ரவுடி பட்டியல் தயாரிப்பில் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஜிபிக்கு எதிராக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 12, 2025
‘மாணவர்கள் மட்டும்’ பஸ்கள்: பாராட்டிய CM ஸ்டாலின்

சென்னையில், சமீபத்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில், சிறப்பு பஸ் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ‘மாணவர்கள் மட்டும்’ சிறப்பு பஸ் திட்டத்தை போக்குவரத்து அமைச்சரும், அதிகாரிகளும் விழிப்புடன் கண்காணித்து மேலும் மேலும் சிறப்பாக செயல்படுத்திட வாழ்த்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
சிம்பு மேல தப்பில்ல: அஷ்வத்

‘STR 51’ ஷூட்டிங் இன்னும் தொடங்காததற்கு சிம்பு காரணமல்ல, தான் திரைக்கதை எழுதுவதில் தொய்வு ஏற்பட்டதாலேயே தாமதமாவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். குத்து, தம், மன்மதன் காலகட்ட சிம்புவை மீண்டும் அனைவரும் ரசிக்கும்படி திரையில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் 2026-ல் ரிலீஸாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் படுகுஷியாக உள்ளனர்.
News September 12, 2025
அற்புதம்.. 6.2 கிலோவில் பிறந்த ‘பீம் பாய்’

பிறந்த குழந்தைகளின் எடை, வழக்கமாக 2.5- 3.2 கிலோ வரை இருக்கும். ஆனால், கடந்த வாரம் ம.பி.யில் பெண்ணுக்கு <<17618155>>5.2 கிலோ எடையில்<<>> ‘பீம் பாய்’ குழந்தை பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது, அதனை மிஞ்சும் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. புளோரிடாவில் டேனியல்லா ஹைன்ஸ் என்பவர் 6.2 கிலோ எடையுள்ள குழந்தையை ஈன்றுள்ளார். போட்டோஸ் SM-ல் பரவியதால், ஓவர் நைட்டில் அந்த குழந்தை பிரபலமாகியுள்ளது.