News June 15, 2024

BREAKING: தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு

image

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 700 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. இந்நிலையில், ரேஷன் அட்டையை ஒப்படைத்துவிட்டு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திராவில் தஞ்சமடைய உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Similar News

News November 13, 2025

டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளின் சதி: USA

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா சிறப்பாக விசாரணை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய சதித்திட்டம் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்த அவர், விசாரணையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 13, 2025

ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.

News November 13, 2025

BIHAR RESULT: வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

image

பிஹார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (நவ.14) நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தலைநகர் பாட்னாவில் நவ.16 வரை தேர்தல் நடத்தை விதிகளை நீட்டித்து ECI உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!