News June 15, 2024
UPI மூலம் 47% இந்தியர்களிடம் நூதன மோசடி

மக்கள் UPI மூலம் பணம் செலுத்தும் வழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல், நூதன முறையில் 47% இந்தியர்களிடம் கைவரிசை காட்டியுள்ளது. UPI லிங்கை அனுப்பி அதை திறக்கும்படியோ, ஸ்கேன் செய்யும்படியோ அறிவுறுத்தும் இக்கும்பல், அதை நம்பி மக்கள் OTP அல்லது PIN விவரங்களைக் கொடுத்ததும், UPI மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை திருடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News March 5, 2026
மார்ச் 5: வரலாற்றில் இன்று

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்
News March 5, 2026
‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.


