News June 15, 2024
சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: 13 பேர் கைது

நெல்லையில் நேற்று முன்தினம் பட்டியலின இளைஞருக்கும், மாற்று சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சிபிஎம் அலுவலகத்தில் வைத்து சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி சங்க தலைவர் பந்தல் ராஜா உள்ளிட்ட 25 பேர் CPM அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், தற்போது பந்தல் ராஜா உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்துள்ளார்.
Similar News
News September 12, 2025
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

திருமண மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சீமான் மன்னிப்பு மனுவை சமர்ப்பிக்காவிட்டால், வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடித்துக் கொண்டிருந்த போதே, திருமண ஆசை காட்டி ஏமாற்றியவர், பொதுவெளியில் அவதூறாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
News September 12, 2025
கதறும் Employees.. எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்!

வேலை செய்யும் 88% இந்தியர்களுக்கு லீவு கிடைக்காமல், நேர வரைமுறையின்றி வேலை செய்வதாகவும், பொது விடுமுறையிலும் வேலை செய்ய நிறுவனங்கள் வலியுறுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. வேலை நேரத்தில் டீ பிரேக் கூட கிடைப்பதில்லையாம். வீட்டுக்கு சென்ற பிறகு போன் வந்து அதனை எடுக்காமல் விட்டால், Promotion கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் 79% பேர் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா..?
News September 12, 2025
கோவையில் நிலம் வாங்கியது உண்மை: அண்ணாமலை

கோவையில் விவசாய நிலம் வாங்கியது உண்மை தான் என அண்ணாமலை கூறியுள்ளார். இயற்கை விவசாயம் செய்ய தங்களது ‘We The Leaders’ அறக்கட்டளை மூலம் கடந்த ஜூலை 12-ம் தேதி நிலம் வாங்கப்பட்டதாகவும், பத்திரப்பதிவு கட்டணமாக ₹40,59,220 செலுத்தியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ₹85 கோடி மதிப்பிலான நிலத்தை ₹4.5 கோடிக்கு சட்டவிரோதமாக அவர் வாங்கியுள்ளதாக சோஷியல் மீடியாவில் பலரும் விமர்சித்து வந்தது கவனிக்கத்தக்கது.