News June 15, 2024
வருகிற 20ஆம் தேதி சென்னை வருகிறார் மோடி

சென்னை-நாகர்கோயில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க சென்னைக்கு 19ஆம் தேதி மோடி வர இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் 20ஆம் தேதி சென்னை வருவதாகவும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில்கள், பேசின்பிரிட்ஜ் ரயில் பராமரிப்பு நிலையம், மேட்டுபாளையம்-நெல்லை இரட்டை வழித்தடம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது புதிய அப்டேட்

தமிழ்நாட்டில் ஏப்.15-ல் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மற்றொருபுறம் ECI-யும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது தேர்தல் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து துணை ராணுவம் தமிழகம் வருகை தந்துள்ளது. சுமார் 70 பேர் கொண்ட CRPF வீரர்கள் சென்னை KK நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
News March 7, 2026
ஈரான் போர் இப்போதைக்கு முடியாது போலயே?

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரை நிறுத்த பல நாடுகள் சமரசம் செய்ய முன்வருவதாக ஈரான் அதிபர் மசூத் கூறியுள்ளார். உலக அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்ற அவர், ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தயங்கமாட்டோம் எனவும் பேசியுள்ளார். மேலும், சமரசம் செய்யும் நாடுகள் முதலில் இஸ்ரேல், USA-விடம் அதுபற்றி பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.


