News June 15, 2024

ஜீரண சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய்

image

உணவு செரிமான பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் நெல்லிக்காய் சிறந்த தீர்வு. ஜீரணக்கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் அரை நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு கிளாஸ் குடித்தால் உடனே பலன் கிடைக்கும். உடலுக்கு ஆற்றல் ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.

Similar News

News September 12, 2025

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு!

image

திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால், ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆவதாக தகவல் வெளிவந்துள்ளது. மொத்தமுள்ள 22 அறைகளும் நிரம்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் 66,312 பேர் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். அதேநேரம், உண்டியலில் ₹3.81 கோடி காணிக்கை வந்துள்ளதாகவும் TTD நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 12, 2025

வடை மடிக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள்: EPS

image

உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள், ஆற்றில் கிடக்கிறது (அ) டீக்கடைகளில் வடை மடிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக EPS கடுமையாக சாடியுள்ளார். சமீபத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இந்த முகாமில் பெறப்படும் 46 பிரச்னைகளை கண்டுபிடிக்க தமிழகத்துக்கு ஒரு முதல்வர் தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

News September 12, 2025

மூலிகை: நன்னாரியின் நன்மைகள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
➤நன்னாரி சாற்றை குடிப்பது சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும், குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
➤உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலை குளிர்ச்சியாக்கவும், ஒற்றைத் தலைவலிக்கும் நன்னாரி சாறு நல்ல மருந்தாகும்.
➤பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒருநாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால், சொறி சிரங்கு குணமாகும். Share it to friends.

error: Content is protected !!