News June 14, 2024

தமிழிசை அக்காவிடம் அமித்ஷா பாசமாக பேசினார்

image

தமிழிசை சௌந்தரராஜனிடம், அமித்ஷா மேடையில் வைத்து கோபமாக பேசிய விவகாரத்தில், அமித்ஷா அனைவரிடமும் இப்படித்தான் ஃப்ரீயா பேசுவார் என அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மேடையில் அவருக்கும், அமித்ஷா ஜிக்கும் நடந்த உரையாடலை பலரும் பலவிதமாகக் கூறிவருகின்றனர் என்றார். மேலும், அமித்ஷா அனைவரிடமும், உரிமையாக பாசமாக பேசக்கூடியவர். அப்படித்தான் தமிழிசை அக்காவிடமும் பாசமாகப் பேசினார் என்றார்.

Similar News

News March 2, 2026

குமரி: குளச்சல் அருகே இளைஞர் தற்கொலை

image

பாலப்பள்ளம் அருகே கூந்தன் விளையை சேர்ந்தவர் அனில் குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காதால் ஊருக்கு திரும்பியவர் அவரது அண்ணனுடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய குளச்சல் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 2, 2026

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

image

*Hall Ticket, தேவையான எழுதுப் பொருள்களை செக் பண்ணிக்கோங்க. *தேர்வு நாள்களில் காலை உணவை தவறாமல் சாப்பிடவும். எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டாம் *Question Paper-ஐ முழுமையாக படித்துவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதி முடித்து விடுங்கள் *பாதியில் பதில் எழுத மறந்து விட்டால், உடனே டைம் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். கொஞ்சம் ரிலாக்ஸாக யோசிங்க. பயம் வேண்டாம் மாணவர்களே.. வெற்றி நிச்சயம்!

News March 2, 2026

தவெகவுடன் கூட்டணியா? திமுகவுக்கு பதற்றம்

image

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக ஆஃபர் அளித்த 25 தொகுதிகளை ஏற்க முடியாது என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது; காங்., பலத்தை தவெக அறிந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இது சீட்களை உயர்த்துவதற்கான ஸ்ட்ரேட்டஜி என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மீண்டும் தவெகவுடன் காங்., இணைய முனைப்பு காட்டுகிறதோ என்ற பேச்சு திமுக தரப்புக்கு சற்று பதற்றத்தை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!