News June 14, 2024

மகளிர் உரிமைத் தொகை ₹1000 நாளை வரவு

image

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1000, நாளை காலை 10 மணிக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிபடி, மாதந்தோறும் பெண்களுக்கு ₹1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10ஆவது தவணைத் தொகை நாளை வரவு வைக்கப்பட உள்ளது.

Similar News

News September 12, 2025

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இந்தியா

image

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா., சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக தெரிவித்த இந்தியா, தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 2015, ஜன.9-க்கு முன்பு அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்க இந்தியா அனுமதி அளித்திருந்தது.

News September 12, 2025

உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

image

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.

News September 12, 2025

பெரியாரை கற்றதால் திமுகவுக்கு ஆதரவு: திருமா

image

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கி விடும் என்று EPS சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, திமுகவுடன் தான் ஏன் கூட்டணி வைத்தேன் என திருமா தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பெரியாரை பயின்றதால் திமுகவை ஆதரிப்பதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், 2 சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!