News June 14, 2024

புதுவை: துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு

image

விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட ரெட்டியார் பாளையம் பகுதியில் துணைநிலை ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு பணி , பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொதுமக்களிடம் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Similar News

News March 7, 2026

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் புதுச்சேரி தட்டாஞ்சாவடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

News March 7, 2026

முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

image

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில், முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ச. கார்த்திக் குமாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அழகு கலை வல்லுநரான அவர், நாம் தமிழர் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

News March 7, 2026

திமுகவுக்கு இடமில்லை: கிரிஷ் சோடங்கர் அதிரடி

image

புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியில் திமுகவுக்கு பங்கு இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தங்களது தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமையும் என்று திமுக தொடர்ந்து கூறி வரும் நிலையில், காங்கிரஸின் இந்த அறிவிப்பு இரு கட்சிகளிடையே அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!