News June 14, 2024

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சிகள்

image

திருச்சி விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் சோதனை செய்யும் போது ரூ.16,75,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 27, 2025

திருச்சி: அரசு வேலை; தேர்வு இல்லை!

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 27, 2025

திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

image

திருச்சி மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

திருச்சி மாவட்டத்தில் 1182 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1182 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் விநாயகர் சிலைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிலை அமைப்பாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 29-ஆம் தேதி சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.

error: Content is protected !!