News June 14, 2024
பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது வழக்கு

தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கர்நாடக அரசை கண்டித்து கடந்த 12 ஆம் தேதி பூம்புகாரிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருவாரூர் கீழவீதி வரை சென்றனர். இந்த ஊர்வலம் அனுமதியின்றி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது திருவாரூர் போலீசார் இன்று (ஜூன் 14) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 10, 2025
திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

திருவாரூர் பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
திருவாரூர் வருகை தரும் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 20-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
News September 10, 2025
பீர் பாட்டிலால் கொலை செய்ய முயன்றவருக்கு சிறை

ஆலிவலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த துரையரசன் என்பருடன் ஏற்பட்ட நில தகராறு காரணமாக ஆபாசமாக திட்டி பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவில் கொலை முயற்சி வழக்கில் ரமேஷுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.