News June 14, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 19இல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது செந்தில் பாலாஜி-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News November 13, 2025
ஆண்களுக்கு மாதவிடாய்.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

ஆண்களுக்கும் மாதவிடாய் இருக்க வேண்டும் என்ற தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். ஆண்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட்டால், அந்த நேரத்தில் பெண்கள் படும் வலியை, Trauma, Feelings-ஐ அவர்களால் உணர முடியும் என்று தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகள் இருப்பதாக நெட்டிசன்கள் டிரோல் செய்தனர்.
News November 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 13, ஐப்பசி 27 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶சிறப்பு: குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்.
News November 13, 2025
பிஹாரில் NDA தான் வெல்லும்.. ஆனால் CM தேஜஸ்வி!

இன்று வெளியான <<18269712>>Axis My India <<>>கருத்து கணிப்பிலும் பிஹாரில் NDA கூட்டணி தான் வெல்லும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த CM ஆக யார் வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பில் நிதிஷ்குமாருக்கு 22% பேரும், தேஜஸ்வி யாதவ்விற்கு 34% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு 4% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


