News June 14, 2024

திருவாரூர் ஆட்சியர் தாமாக முன்வந்து இரத்த தானம்

image

சர்வதேச இரத்த கொடையாளர் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தார். இரத்த கொடையாளர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஆட்சியரே இரத்த தானம் செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News

News March 2, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருவாரூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி அல்லது உபகரணங்களுக்காக முன்பண கட்டணங்கள் கோருதல், நேர்காணல் இல்லாமல் கோரப்படாத சலுகைகள், சிறிய வேலைக்கு அதிக ஊதியம் வழங்குவதாக வாக்குறுதிகள், விரைவாக செயல்படுங்கள் போன்ற அழுத்தம் கொடுக்கும் சலுகைகளை பற்றி சந்தேகப்படுங்கள் என்றும், இது மோசடிக்காரர்களால் அனுப்பி வைக்கும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

News March 2, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.1) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 1, 2026

திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!