News June 14, 2024

திருச்சியை சுற்றி 45 ஆயிரம் கிலோ தூசி நீக்கம்.!

image

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 45,895 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டுள்ளது என்றும், அதனைத்தொடர்ந்து, 31 கிலோமீட்டருக்கு மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இறுதியாக ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ அபிஷேகபுரம் பகுதிகளில் மொத்தம் 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

Similar News

News March 7, 2026

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

திருச்சி: ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த எம்பி

image

திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!