News June 14, 2024
EPFO: கோவிட்-19 அட்வான்ஸ் சேவை நிறுத்தம்

கொரோனா காலத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக, EPFO-யில் இருந்து கோவிட்-19 அட்வான்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இச்சேவையை பயன்படுத்தி இருமுறை முன்பணம் பெறலாம். இந்த நிலையில், தற்போது அதற்கான தேவை இல்லை என்பதால், இச்சேவையை திறும்ப பெறுவதாக EPFO நிறுவனம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News March 7, 2026
3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.
News March 7, 2026
வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


