News June 14, 2024
ரேசன் பொருட்கள் வழங்கவில்லை: அன்புமணி

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை தொடந்து 3ஆவது மாதமாக வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏழை மக்களுக்கான அத்தியாவசிய தேவையான உணவுப்பொருட்களை வழங்காததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்க: திருமாவளவன்

பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். EPS முதலமைச்சராக வந்தால், அவரால் அந்த பதவியில் அமர முடியுமா என்றும், நிதிஷ்குமாரின் கதி EPS-க்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்; MGR, ஜெ., கட்டிக் காத்த அதிமுகவை காப்பாற்றுங்கள் எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News March 7, 2026
3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.


