News June 14, 2024

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் கிலோ ₹600க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ஒரேநாளில் ₹2000 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ₹2,600க்கும், சில்லறை விலையில் ₹2,800 முதல் ₹3,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை கிலோ ₹600இல் இருந்து ₹800க்கும், சில்லறை விலையில் ₹1,000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 16, 17ஆம் தேதிகளில் அடுத்தடுத்து முகூர்த்தநாள் வர உள்ளது.

Similar News

News September 7, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 7, 2025

இபிஎஸ் செய்தது சரியா? கட்சிக்குள் விவாதம்

image

பிரிந்து சென்றவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செங்கோட்டையன் மீது இபிஎஸ் எடுத்த நடவடிக்கை அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பிடுங்கப்பட்டுள்ளது எதிர்பாராதது என்கின்றனர். என்ன இருந்தாலும் கட்சித் தலைமைக்கே கெடு வைப்பது ஏற்க முடியாதது என்று ஒருதரப்பும், நடவடிக்கைக்கு முன் விளக்கம் கேட்டிருக்கலாம் என இன்னொரு தரப்பும் கூறுகின்றனர். உங்க கருத்து?

News September 7, 2025

ஃபிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய PM

image

ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் PM மோடி இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் PM தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உலகில் அமைதி நிலவ இந்தியா – ஃபிரான்ஸ் ராஜதந்திரக் கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!