News June 14, 2024
சிவகங்கை: கைதி தப்பி ஓட்டம் – வலைவீசும் போலீஸ்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபால் (29) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரை கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்தநிலையில், சிறையில் இருந்த கோபால் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
BREAKING சிவகங்கை: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

மானாமதுரை அருகே தகராறு வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் தேவேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 13, 2026
சிவகங்கை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

சிவகங்கை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறுவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
BREAKING மானாமதுரை ஆகாஷ் உடலில் 28 காயங்கள்..!

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில், ஆகாஷ் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வலது கால் நடுப்பகுதி தசை, முழங்கை, முழங்கால், மூளை அடிப்பகுதியில் ரத்த கசிவு, நுரையீரல் வீக்கம் உட்பட 28 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்குதலில் ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


