News June 14, 2024

கதவுகளை மூடி உறங்குங்கள்: எஸ்.பி. எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதிகளில் கடந்த 2 வாரங்களில், காற்று வருவதற்காக வீடுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் கதவுகளை திறந்து வைத்து தூங்காமல், மூடிவிட்டு தூங்கும்படி தென்காசி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News July 9, 2025

தென்காசி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 12க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

தென்காசியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

தென்காசி மாவட்ட சங்கம் மருத்துவமனை மூலம் மருத்துவம் மற்றும் யோகா சார்ந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயதுவரம்பு 40. மாத ஊதியம் ரூ.15,000. விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 16. www.tenkasi.nic என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

News July 8, 2025

தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!