News June 14, 2024
மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்தார். இந்நிலையில், விரிவான தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டதால், ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என விளக்கமளித்தனர். தேர்தல் ஆணையமே விரும்பினாலும் அது முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
Similar News
News March 7, 2026
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 7, 2026
BREAKING: சம்பள உயர்வு.. அறிவித்தது தமிழக அரசு

மே மாதம் முதல் மருத்துவத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம், 41,000 ஊழியர்களுக்கு 2026- 27-ம் ஆண்டுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் இதன்மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ₹169 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு ஊதிய உயர்வு என்ற விவரங்களுடன் விரைவில் அரசாணை வெளியாகும்.
News March 7, 2026
EPS-ன் பொதுச் செயலாளர் பதவியை பாஜக பறிக்கும்: CM

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவால் ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு EPS-க்கு பதில் வேறு ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. EPS-ஐ இந்த தேர்தல் வரைக்கும்தான் பாஜக பொறுப்பில் வைத்திருக்கும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே அவர் பதவி பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


